Description
சேதுராமன் சாத்தப்பன் எழுத்துலகில் ஒரு கால் நூற்றாண்டு காலமாக, ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் மற்றும் வர்த்தகம் குறித்து எழுதிவருகிறார் பல்வேறு தொழில்களைப்பற்றியும், தொழில்கள் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும், இளைஞர்களின் வெற்றிக்கு உதவிய பெரிய நிறுவனங்கள் பற்றிய செய்தியும், தொழில் தொடங்கத் தேவையான நிதியை எப்படிப்பெறுவது? யார் மூலம் பெறுவது? எந்த நிறுவனத்தின் மூலம் பெற முடியும்? என்ற விவரங்களை எல்லாம் தெளிவாக இளைஞர்களை கவர்கின்ற வகையில் இந்தப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளும் வழியாக விளக்கியுள்ளார்.
என்ன தொழில் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கும், தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமான புத்தகம் ஆகும்.