Description
தமிழீழ அரசியற்துறையின் முகவரியாய் இருந்து, வீரச்சாவு எய்தும்வரையில் இனவிடுதலைக்கான பணியை ஆற்றிய ஓர் போராளியின் வரலாறு, நூலாக உங்கள் கைகளில் தவழுகிறது.
தமிழீழ மண் மீட்கப்பட்டு, கட்டுக்கோப்புடைய பலமான அரசாக இயங்கிவந்த காலப்பகுதியில், வல்லரசு நாடுகளின் இயங்குநிலைக்கு அடிபணியாத அரசாக தமிழீழம் நிலைபெற்றிருந்ததனால் 2009இல் தமிழீழ அரசு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.
எவ்வாறு திட்டமிடப்பட்டு, தமிழீழ அரசு வல்வளைப்புச் செய்யப்பட்டு, தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டது என்பதை, தமிழின அழிப்பிற்கெதிராகப் போராடிய ஓர் போராளியின் வரலாறினூடாகப் புரியவைக்கும் முயற்சியே இந்த ஆவணமாகும்.