Description
கண்டராதித்தன் கவிதைகளில் வரும் தெய்வங்கள் நின்று கொல்வதுமில்லை, வரம் தருவதுமில்லை. நம்மைத் தனியே விட்டுச் சென்ற உலகினுள் அவர்களும் இப்போது விருந்தாளியாக வந்து ஏமாற்றமும், தரித்திரமும் பிடுங்கித் தின்னும் சிலரது வாழ்வைக் களிக்கிறார்கள். அவல நிலையில் இருக்கும் வாழ்வை கடத்துபவர்களான நம்மால் இந்த நிலைக்கான காரணத்தை விளக்க முடியாது. சிறு புன்னகையை வாயோரம் தேக்கி வைத்திருக்கும் தெய்வங்கள் நம் இயலாமையையும் தரிசனம் செய்கின்றன.

