Author: சா. கந்தசாமி

Pages:

Year: 2024

Price:
Sale priceRs. 330.00

Description

செல்லையா என்ற சிறுவனின் பதின் பருவத்துக் கிராம வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லும் நாவல் இது.

தமிழின் முன்னோடி எழுத்தாளரான கந்தசாமியின் கதைகூறும் முறை ஆரவாரமற்றது. முடிந்தவரையிலும் குறைவாகச் சொல்லும் பாணியைக் கொண்டது. சொல்லாமல் பல விஷயங்களை உணர்த்தும் சூட்சுமத்தைக் கொண்டது.

யதார்த்தவாத நாவல்களின் வகைமாதிரி என்று சொல்லத்தக்க நாவல் இது. உலகமயமாதலுக்கு முந்தைய காலகட்டத்தை யதார்த்தமாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கிறது.

கலாபூர்வமாகவும் வடிவ அளவிலும் காலத்தின் பதிவு என்ற முறையிலும் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நாவல் இது.

You may also like

Recently viewed