Description
ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்டதற்கான காரணம் புரிந்துவிடும்.மற்றவர்களைப் புரிந்துகொள்வது எப்படி? எளிய ஃபார்முலாக்கள், சின்னச் சின்ன வழிமுறைகள், மற்றவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.