Description
ஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும்.மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன? அவற்றை எப்படித் தீர்ப்பது? பிரச்னை இல்லாத மனிதனாக உருவாவது எப்படி? எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப் பதில்சொல்கிறது இந்தப் புத்தகம்.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.