{"product_id":"9788194966760_","title":"இரண்டு கிழவர்கள்","description":"\u003cdiv\u003eரஷ்ய இலக்கியத்தின் சிகரமாக டால்ஸ்டாய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவரது போரும் வாழ்வும் நாவலும் அன்னா கரீனினா நாவலும் உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாக இன்றும் போற்றப்படுகிறது. கிறிஸ்தவ சபையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதைவிட பிற மனிதர்களையும் கடவுளையும் நேசிப்பதும், அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்வதுமே முக்கியமானது என்பதில் டால்ஸ்டாய் உறுதியாக இருந்தார்.\n\nதனிப்பட்ட நபர்களின் நில உடைமை, திருமண முறை ஆகியவற்றை அவர் சாடினார். மனித வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்பதை அவர் தனது வாழ்நாளின் கடைசிவரையிலும் வலியுறுத்தி வந்தார். அவருடைய படைப்புகள் அனைத்தும் அதையே பறைசாற்றுகின்றன. என்பதை இவற்றை வாசிப்போர் உணர்ந்துகொள்ள முடியும்.\nடால்ஸ்டாயின் ஆகச்சிறந்த கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் இந்தக் கதைகளைப் பொக்கிஷமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே இவற்றைச் சரளமான தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது ஆசை இந்நூலின் வாயிலாக நிறைவேறியுள்ளது.\u003c\/div\u003e","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":51563669389595,"sku":null,"price":330.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0815\/1492\/2267\/files\/Irandu_20Kizhavargal.jpg?v=1766833829","url":"https:\/\/dialforbooks.in\/products\/9788194966760_","provider":"Dialforbooks","version":"1.0","type":"link"}