Description
முழுமையாக மூடப்பட்ட வீட்டின் அவலக் காட்சிகளைப் பெரும் உயரத்திலிருந்து கண்ணாடி பார்த்த கதையாக மாற்றியிருக்கிறார் ஆமினா. ஒவ்வொரு கதையும் ஆயிரம் அரசியல் பேசுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் உள்ளடங்கிய இஸ்லாமியக் குடும்பங்களின் அரசியலைப் பேசும் தொகுப்பு இலக்கிய உலகிற்கு புதிது. அனைத்து கதைகளும் வஞ்சிக்கப்பட்ட பெண்களைப் பேசுவதோடு அவர்களின் ஆறாத ரணங்களுக்கு வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் ஓர் அரசியல் உண்டு. அதை, 'நிகாடு' பல பரிணாமத்தில் கூறாய்வு செய்திருக்கிறது.
- எழுத்தாளர் கா.ரபீக் ராஜா