Description
போராளிகளில் இருவகை உண்டு. ஒன்று காந்தீய வழி. இவர்கள் அறவழிப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
மற்றொன்று ஆயுதப் போராட்ட வழி. இவர்கள் அடக்குமுறையை ஆயுதம் ஏந்துவதால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.
அவர்களின் வாழ்வு - வீரம் - தியாகம் இவை அனைத்தும் நம் தமிழ் மொழி நிலைத்து நிற்கும் காலம் வரையிலும் அழுத்தமாகப் புகழ் பேசிக் கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட தியாகச் செம்மல்களின் வாழ்வின் முழுவீச்சைப் பற்றி நாம் அறியா விட்டாலும் சுருக்கமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கான சிறு முயற்சிதான் இந்நூல்.