Description
மாயாவைத் தேடி…
இந்நூலுக்கு ஓர் அணிந்துரை வழங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் இக்கதைகளின் தரமும் நயமும் மட்டுமல்ல; இதனை எழுதிய படைப்பாளி இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓர் யுவதி என்பது இம்மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம்.
இவ்வாசிரியர் உஷா கிருஷ்ணன் எனது நண்பர் கவிஞர் பரிணாமனின் புதல்வி. செல்வி உஷா கிருஷ்ணன் எதிர்காலத்தில் படைக்கவிருக்கும் எழுத்துக்கள் மிகமிகச் சிறப்பாக விளங்கும் என்பதற்கு இவ்விருகதைகளும் முன்னோடியாகக் கட்டியங்கூறி நிற்கின்றன.