Description
நள்ளிரவு மணி ஒலிக்கிறது..
அரசாங்க மரியாதையாக பீரங்கியில் இருந்து 31 குண்டுகள் வெடிக்கின்றன. வெள்ளை சர்வாணி யும் உடலோடு ஒட்டிய சுரிதரும் அணிந்திருக்கும் நேரு கொடிக்கம்பத்தை நோக்கி நடக்கிறார். தலையை உயர்த்திப் பார்க்கிறார். நேற்று இரவு வரை செங்கோட்டையின் மேல் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டு இருந்தது. ஆனால் விவேகம் உள்ள பிரிட்டிஷ்காரர்கள் இரவிலேயே கொடியை அகற்றி விட்டார்கள். சுதந்திர இந்தியாவின் பிரகாசமான மூவர்ணக் கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றுகிறார். மேடை ஏறி பேசுகிறார்.
நெடுங்காலத்துக்கு முன்பே நாம் விதியோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அன்று செய்த உறுதியை நிறைவேற்றும் காலம் இப்போது வந்து விட்டது. அதை மொத்தமாகவோ அல்லது முழு அளவிலோ இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.