Description
பாபா சாஹேப் அம்பேத்கருடைய கருத்தியல் புரட்சி, தமிழ் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு முக்கியமாக அமைந்தது என்பது மாற்றுக் கருத்து இல்லை.
அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்த இட ஒதுக்கீடு கொள்கை இந்திய தேசத்தின் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்டவர்களின் கண்களை அகலத் திறக்கச் செய்தது உண்மை.
தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்காக மட்டுமின்றி சமத்துவ சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர்கள் இவர்கள்.
பட்டியல் இன மக்களின் உரிமை விவகாரத்தில் வட இந்தியாவைக் காட்டிலும், தமிழ்நாடு சமூக நீதி விவாகரத்தில் எவ்வளவு முன்னோக்கி தீவிர நிலை அடைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் தலைவர்களாக, அம்பேத்கரும், பெரியாரும் விளங்கினர்.
மனித சமூகத்தின் உரிமை அரசியலை உரக்க பேசிய, புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் வரலாற்று நீரோட்டத்தில் பயணிக்க, இந்நூல் வாசகருக்கு நிச்சயம் பயன்படும் என்று நம்புகிறோம்.