Description
இயற்கை சீற்றங்களினால் புவியில் பெருமளவில் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதையே இயற்கை பேரிடர் என்கிறோம்?
பேரிடர் மேலாண்மை என்பது ஒரு நோயை குணப்படுத்தும் மருந்தை உட்கொள்வது போன்ற செயலாகும்.
இயற்கையோடும் மனித வாழ்வோடும் தொடர்புடைய பேரிடர் என்னும் இந்த பெரிய பிரச்சனையை ஒரு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியோடு தீர்க்க வேண்டியது அவசியம்.
மனித உயிரின் ஆபத்தை க்குறைக்க அனைவரும் பேரிடர் மேலாண்மையில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்
நிலையற்ற புவியியல் மாற்றங்கள் நாள்தோறும் நிலவி வரும் இன்றைய நாட்களில் இவற்றிற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராயும் ஒரு முக்கிய நோக்கத்தை வாசகருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சிக்கான நூல் இது என்று கருதுகிறேன்.
-பதிப்பகத்தார்