Description
அமெரிக்க பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் ரத்தம் கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிற வெறியினுடைய மூலம் ஐரோப்பா வென்றாலும், அதை வைத்து ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டு இருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்!
நமது மாநகரப் பகுதிகளின் குடிசை வாழ் ஏழைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் அதிகம் என்பது போல, அமெரிக்க நகர்புறச்சேரிகளில் கருப்பின மக்களே அதிகம்.
அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டது என்று ஒபாமா தேர்வின் போது கூறப்பட்ட மாய் மாலங்கள் வடிகட்டிய பொய் என்பது இன்றும் நிரூபணமாகவே உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 90 சதவீத சொத்துக்களை வைத்திருக் கும் வெள்ளையர்கள், ஏதுமில்லாத கருப்பர்களை திருப்தி செய்ய, நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்து கருப்பர்கள் கையில் ஆட்சியை கொடுக்கவில்லையா??