Description
ஆன்மிக நிலையை அடைவது மிகக் கடினம்; அது அனைவராலும் முடியாது' என்கிற நம்பிக்கை மனிதர்களுக்குள் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இதனால் 'ஆன்மிகம் என்பது சிலருக்கே உரியது, அது துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே சாத்தியம்' என்கிற எண்ணம் பொதுவெளியில் உருவாகிவிட்டது.
இந்த எண்ணத்துக்கு முற்றிலும் மாறான ஓர் உண்மையை அந்தச் சூஃபி வழி வெளிப்படுத்துகிறது. அதாவது, 'ஆன்மிகம் என்பது எங்கோ சென்று அடையவேண்டிய இலக்கு அல்ல, அது ஏற்கெனவே நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் இயல்பான நிலை' என்கிறது சூஃபி வழி.
அந்த நிலையைக் கண்டடைந்த நூலாசிரியரின் அனுபவங்களை விவரிப்பதே இந்நூல். இது வாழ்க்கையின் சுமையால் சோர்ந்து, கேள்விகளால் கலங்கி, அமைதியைத் தேடிய ஒரு மனிதனின் உள்ளப் பயணம்.

