Description
இந்தியாவின் இரும்பு மனிதர் எனும் அடைமொழியைக் கொண்டிருக்கும் படேல் குறித்து நாம் கொண்டிருக்கும் மனச்சித்திரம் மிகவும் மேலோட்டமானது, மங்கலானது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி, நவீன இந்திய வரலாற்றிலும் சரி படேல் வகித்திருக்கும் பங்கு மிக முக்கியமானது என்றாலும் அவர் அரிதாகவே நினைவுகூரப்படுகிறார்.
படேல் இல்லாமல் போயிருந்தால் நவீன இந்தியா எனும் கட்டமைப்பு உருவாகியிருக்காது. வெவ்வேறு மூலைகளில் சிதறிக்கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைப்பதற்கு அவர் முன்னெடுத்த போராட்டம் அசாத்தியமானது.
படேலின் அபூர்வமான அரசியல் வாழ்வை அவர் வாழ்ந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் பொருத்தி இந்த விரிவான நூலை எழுதியிருக்கிறார் ரமணன். ஆச்சரியமூட்டும் அரிதான பல தகவல்கள் நூல் நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன. படேலைப் புரிந்துகொள்ளவும் கொண்டாடவும் இந்நூல் பேருதவி புரியும்.

