Description
பூர்வ குடிகள் குறித்த அமெரிக்க மக்களின் எண்ணத்தை மாற்றியமைத்த உன்னத படைப்பு இந்த நூல். அமெரிக்காவில் நிகழ்ந்த வெள்ளையர்களின் குடியேற்றமும், அவர்களது நிலப்பசியும், தங்க வேட்டையும், நூற்றாண்டுகளாகப் பூர்வ குடிகள் வாழ்ந்திருந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தன. அழித்தொழித்தன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் ரிசர்வேஷன்களில் அடைக்கப்பட்டனர். இயற்கையோடு இசைந்த அவர்களது வாழ்வு பறிக்கப்பட்டது. அந்த வரலாறே, இந்த நூல்.

