Description
நெடுநாள் வாசிப்பிலிருந்து எழுத்து நோக்கி நகரும் பெண்கள், பெண்ணியத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர், அதைத் தங்கள் எழுத்து வழி கடத்தவும் செய்கின்றனர். Twitter Spaces மூலம் பெரும் வாசிப்பு இயக்கமாக முச்சந்து மன்றம் என்கிற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் வாசிப்பை முன்னெடுக்கும் தோழர்கள் காளி, முனைவர் கோமதி, முனைவர் நாகஜோதி, மற்றும் மீரா ஆகியோர் இணைந்து கொண்டுவரும் பெண்ணியச் சிறுகதைத் தொகுப்பு அவள் இவள் உவள்.