Description
மேதகு நித்திலனின் மரணம் குறித்த புலன் விசாரணையாக வளர்கிறது நித்திலன் வாக்குமூலம், அதிகார மர்மங்களுக்கு அருகில் ஒரு மெழுகுவத்தி ஏற்ற முனைகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தும் கபிலன் வைரமுத்துவின் ஆகோள் என்ற அறிவியல் புதினத் தொடரில், ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய புதினங்களின் வரிசையில், மூன்றாவது புதினமாக நித்திலன் வாக்குமூலம் பதிவாகிறது.

