Description
பொறியியல், உள்கட்டமைப்பு, உலக அரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் மு. இராமனாதன், தேர்ந்த இலக்கிய வாசகரும்கூட. உரைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படும் அவருடைய வாசிப்பனுவத்தின் பதிவு இந்த நூல்.
கூர்மையான வாசிப்புத்திறன் கொண்ட இராமனாதன் பிரதியிலுள்ள நுட்பங்களையும் பல்வேறு அடுக்குகளையும் துல்லியமாக உணர்த்துகிறார். பிரதியின் சாரத்தையும் அது தரும் உணர்வுகளையும் தெளிவாகவும் ரசனையுடனும் பகிர்ந்துகொள்கிறார்.
இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் புதிய வாசல்களைத் திறக்கக்கூடியவை. மாலை நேரத்தில் தேநீர் அருந்தியபடி உரையாடும் பாங்கில் வாசகரோடு இவை பேசுகின்றன.
பல கட்டுரைகள் நல்ல சிறுகதையைப் படிக்கும் அனுபவத்தைத் தருகின்றன.