Description
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. வாசகருக்கும் கவிதைக்குமான அந்தரங்க இடைவெளிக்குள் பயணிக்கும் பரவசத்தை இக்கட்டுரைகள் தருகின்றன.
பகட்டை மறுதலிக்கும் இசையின் உரைநடைக்குள் இயல்பாகவே எளிய ஒய்யாரம் புகுந்துகொள்கிறது. மொழியின் சிடுக்குகளில் சிக்கிக்கொள்ளாத அந்த நளினம் அவரது கவிதைகளைப் போன்றே கட்டுரைகளையும் கலையனுபவமாகப் பறந்தெழச் செய்கிறது.
இந்த நூலெங்கும் காற்றுக் குமிழிகளை ஊதியபடி ஓடும் ஒரு சிறுவனால், அதனுள் ஆயிரம் குட்டிப் பிரபஞ்சங்களை உருவாக்கிவிட முடிகிறது.