Description
நிரஞ்சன் பாரதி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன்.
புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன்.
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்.
MYTAMILGURU என்ற இணைய வழி தமிழ்ப்பள்ளியை நடத்தி
வருகிறார். இதில் அடிப்படைத்தமிழ், இலக்கணத்தமிழ்,
இலக்கியத்தமிழ் வகுப்புகளை உலகெங்கும் பயிற்றுவித்து வருகிறார்.
இவை தவிர பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில்
பங்கேற்றுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.
படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும்
இயற்கையும் தான். தன்னை வளர்க்கும் தமிழை இயன்ற அளவு
தானும் வளர்க்க வேண்டும் என்பதே இவர் கொண்ட கனவு.