Description
முதன்முதலில் எனக்குக் கவிஞராக அறிமுகமான கவிஞர் கே.ஜீவபாரதி, அதன்பின் சிறுவர் இலக்கியம், வரலாற்றுப் புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு,
நேர்காணல், ஆய்வு, கட்டுரை, தொகுப்பு என அகலமாகவும் ஆழமாகவும் இலக்கியத்தில் காலூன்றி எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில்
இந்த நூல் கவிஞர் கே. ஜீவபாரதியின் 114 ஆவது நூல் என்ற சிறப்பைப் பெறுகிறது.இந்த நூலில் கவிஞர் கே. ஜீவபாரதி முதன்முதலில் ஜே.கே. வின் சொற்பொழிவைக்
கேட்டது; அதன்பின் ஜே.கே யுடன் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றியது; ஜே.கே.மரணத்தின் போது அவருக்கு ஏற்பட்ட துயரம்; ஜே.கே. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது என பல நிகழ்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் ஜே.கே.யுடன் பயணித்த அனுபவங்களை பாரதிக்குப்பின் தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே.யின்செம்மாந்த பணியினை ஒரு படைப்பாளி மற்றொரு படைப்பாளியைக் கண்டு இணைந்ததைக் கவிஞர் கே.ஜீவபாரதி தனக்கே உரிய சொல்லாடல்களோடு நம்முன் வைத்திருக்கிறார்.