Description
பாதாளக்கொலுசு / கண்ணம்மாவை முன்வைத்து சில கவிதைகள் எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல் யுகபாரதியின் புதிய கவிதைநூல். மனப்பத்தாயம் முதல் மராமத்துவரை பதின் ஒன்று கவிதை நூல்களை எழுதியுள்ள யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை எட்டுக் கவிதைத்தொகுப்புகளும் எட்டுக் கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். `கண்ணம்மாவை முன்வைத்து சில கவிதைகள்’ எனும் துணைத் தலைப்புடன் வெளிவரும் இந்நூல் இவருடைய பதின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. காதல் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய இந்நூல், வாசிப்பு அனுபவத்திற்கு ஏற்றவிதத்திலும் நவீனக் கவிதைகளின் புதிய போக்குகளையும் காட்டவல்லது வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.